பாட்டி வைத்தியம்

விக்கல், சிறுநீர் எரிச்சல், தொண்டை வலி, முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம் – பாட்டி வைத்தியம்

40+ பாட்டி வைத்தியம் – விக்கல், சிறுநீர் எரிச்சல், தொண்டை வலி, முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம்

பாட்டி வைத்தியம்

2023 ஆம் ஆண்டு Patti Vaithiyam In Tamil – சிறந்த மருத்துவ குறிப்புகள் – பாட்டி வைத்தியம்: விக்கல் நிற்க பாட்டி வைத்தியம், சிறுநீர் எரிச்சல் பாட்டி வைத்தியம், தொண்டை வலி நீங்க பாட்டி வைத்தியம், மாதவிடாய் வர பாட்டி வைத்தியம், முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம்.

  • வாயு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம்

1. இலந்தை மரத்தின் இலையை அரைத்து காயத்தின் மீது பூசினால் வெட்டுக்காயம் குணமாகும்.. தசைப்பிடிப்பு உள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணமாகும்.. மணத்தக்காளி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்..

2. தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும்.. மணலிக்கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.. மணலிக்கீரையை கசாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும்..

3. மணலிக்கீரையை வதக்கி சாப்பிட்டால் மூளை நரம்புகள் புலப்படும்.. நல்லெண்ணெயில் தும்ப பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்க்க தலை பாரம் குணம் ஆகும்.. மஞ்சள் தூளை தேனில் கலந்து கால் இடுக்குகளில் தடவ சேற்றுப்புண் ஆறிவிடும்..

4. கொள்ளுக்காய் வேரை கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்க வாய்ப்பு சரியாகிவிடும்.. சப்போட்டா பழம் தினமும் பகல் பொழுதில் உண்டு வர இரவில் நல்ல தூக்கம் வரும்.. துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்து காயவிட்டு குளித்து வர முகம் அழகு பெறும்..

5. பலாப்பழத்துடன் சிறு கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் உடல் அசதி நீங்கும்.. துத்தி இலையை அரைத்து முகப்பருக்கள் மீது தடவி வர பருக்கள் மறைந்துவிடும்.. மோருடன் சீரகம் இஞ்சி சேர்த்து பருக்கினால் வயிற்று வலி வாயு தொல்லை நீங்கும்..

6. திப்பிலியை நெய்யில் வறுத்து பொடியாக்கி ஒரு சிட்டிகை தேனில் கலந்து குடித்தால் இருமல் நீங்கும்.. ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கசாயம் செய்து சாப்பிட வயிற்று வலி வயிற்றுப்போக்கு குணமாகும்.. வேப்பம்பூவுடன் சீரகம் மிளகு சேர்த்து உண்டு வர பித்தப்பை நோய் குணமாகும்..

7. அதிமதுரம் ஒரு சிறிய துண்டை வாயில் போட்டு கொண்டால் நெஞ்சுக்கமறல் நீங்கும்.. சுரக்காய் சமைத்து சாப்பிட்டு வர தேகத்தைத் கரைத்து சமநிலைப்படுத்தும்.. துளசி இலையை நீர் விட்டு அரைத்து சருமத்தில் பூசி சரும நோய்கள் நீங்கும்..

8. துளசி சாறுடன் சிறிது தேன் கலந்து குடிக்க சளி இருமல் குணமாகும்.. பிரண்டையை நெய் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட நல்ல பசி எடுக்கும்.. தினமும் கேரட் சாப்பிட்டு வந்தால் உடல் பளபளப்போடு முகம் பொலிவு பெறும்..

9. பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் தொடர் வயிற்றுப்போக்கு குணமாகும்.. நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.. எலுமிச்சை சாறு தேன் கலந்து பருக வறட்டு இருமல் குணமாகும்..

10. பப்பாளி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர எலும்பு வளர்ச்சி பெறும்.. முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்தால் இருமல் உடனே நிற்கும்.. முருங்கைக் கீரையை வாரம் மூன்று நாட்கள் சாப்பிட்டால் தோல் சம்பந்தப்பட்ட தொந்தரவு நீங்கும்..

  • பிறப்புறுப்பில் அரிப்பு நீங்க பாட்டி வைத்தியம்

11. தினமும் அரை நெல்லிக்காய் சாப்பிட்டு வர காச நோய்க்கு குணமாகும்.. கீழாநெல்லி இலையை அரைத்து உடம்பில் தேய்த்து குளித்து வர சிறு புண்கள் ஆறும்.. வசம்புத்தூளை வெட்டு காயம் மீது தடவி வர விரைவில் குணமாகும்..

12. பனங்கிழங்கு சாப்பிட்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும்.. மலைவேம்பு இலையை அரைத்து தலையில் பூசி வர பேன் ஒழிந்து விடும்.. சுரக்காய் சாறு எலுமிச்சை சாறு கலந்து பருக சிறுநீரக வியாதி குணமாகும்..

13. தினசரி ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வர இதயம் படபடப்பு நீங்கும்.. மாதுளம் பழச்சாறு எலுமிச்சை பழச்சாறுடன் குடித்து வந்தால் சளி தொல்லை குணமாகும்.. அதிமதுரம் ஒரு சிறிது துண்டை வாயில் போட்டு கொண்டால் நெஞ்சுக்கமறல் நீங்கும்..

14. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.. நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து தேன் சேர்த்து சாப்பிட்டால் விக்கல் தீரும்.. நெந்திரமூலி அதிமதுரம் தூள் சேர்த்து உட்கொண்டு வந்தால் கண்கள் ஒளி பெறும்..

15. விளாம்பழம் சாப்பிட்டு வர சிறுநீர் கொழுப்புகள் நீங்கும்.. கருவேப்பிலையை துவையல் செய்து உண்டுவர பித்த கிறுகிறுப்பு நீங்கும்.. அரசம்பட்டையை நீரில் காய்ச்சி குடித்து வந்தால் குடல் வாதம் சரியாகும்..

16. சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிட சுகமான நித்திரை வரும்.. தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.. நாயுருவி வேர் கொண்டு பல் துலக்கி வர பல் நோய்கள் வராது..

17. ஆரஞ்சு பழம் தினமும் சாப்பிட்டு வர ஈரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.. தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டு வர காது அடைப்பு நீங்கும்.. நெல்லிக்காயை பற்களினால் நன்கு மென்று தின்று வர பற்கள் உறுதி பெறும்..

18. ஓரிதழ் தாமரை பொடியை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர இதயம் வலுபெறும்.. 41 நாட்கள் தொடர்ந்து நெல்லிக்காய் சாப்பிட்டு வர பிராயணத்தின் போது வாந்தி வராமல் இருக்கும்.. தூதுவளை பொடி மிளகு பொடி இரண்டையும் பாலில் கலந்து சாப்பிட்ட தும்மல் நிற்கும்..

19. வெண்பூசணி சாறு 100 மில்லி வீதம் தினமும் சாப்பிட புற்றுநோய் குணமாகும்.. முள்ளங்கி சாறு வாழைத்தண்டு சாறு சேர்த்து குடித்து வர கல்லடைப்பு நீங்கும்.. மாமரத்து பிசினை பித்த வெடிப்பின் மீது தடவி வர பித்த வெடிப்பு குணமாகும்..

20. தாழம்பூ சர்பத் செய்து மாதம் இருமுறை சாப்பிட்டு வந்தால் அம்மை நோயை தடுக்கலாம்.. அருகம்புல் சாறு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.. வெந்தயத்தை தேங்காய் பாலில் ஊற வைத்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால் முடி உதிராது..

  • தலைவலி குணமாக பாட்டி வைத்தியம்

21. மாதுளம் பழச்சாறு தேன் கலந்து 41 நாட்கள் குடித்து வந்தால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.. பப்பாளி பழத்தையும் மாம்பழம் பழத்தையும் தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் மூலம் வராது.. கற்கண்டுடன் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும்..

22. முள்ளங்கி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குறையும்.. நன்னாரி வேரை பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும்.. தூதுவளைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டால் தொண்டை வலி தொண்டை எரிச்சல் குணமாகும்..

23. சுக்கு ஆவாரம் பட்டையை தண்ணீரில் காய்ச்சி சாப்பிட்டு வர கை கால் வலி குணமாகும்.. முருங்கைப் பூவை பருப்புடன் சமைத்து உன்ன கண் எரிச்சல் வாய் கசப்பு மாறும.. நெல்லிக்காயை பற்களினால் நன்றாக மென்று தின்று வர பற்களும் ஈறுகளும் உறுதியாக இருக்கும்..

24. அடிக்கடி மயக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சம் பழச்சாற்றை குடிப்பது நல்லது.. ஸ்கூல் கற்பூரவள்ளி இலையை சாறுடன் பனங்கற்கண்டு கலந்து குடிக்க இருமல் நீங்கும்.. ஒரு டம்ளர் தண்ணீரில் தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் குடிக்க தோல் மிருதுவாக மாறும்..

25. எலுமிச்சம் சாறை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.. தும்மை இலையை அரைத்து மோரில் கலந்து சாப்பிட மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.. அதிகாலையில் குளிர்ந்த நீரில் எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து குடித்தால் உடல் சோர்வு நீங்கும்..

26. அகத்திக் கீரையை தினமும் மதிய உணவுடன் சாப்பிட்டு வர இரத்த கொதிப்பு குறையும்.. வன்னி மர பட்டை தூளை, காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் மூச்சு திணறல் குறையும்.. ஒரு குவளை மோரில் எலுமிச்சம் பழச்சாற்று பிழிந்து சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் குறையும்..

27. செம்பருத்தி பூவை காய்ச்சி தினமும் காலையில் குடிக்க இதயம் வலிமை பெறும்.. ஓமம் பனங்கற்கண்டு மிளகு இவற்றை பாலில் காய்ச்சி குடிக்க சளி குணமாகும்.. ஜாதிக்காய் விதைகளை அரைத்து அடிக்கடி தலையில் தேய்த்துவர ஒற்றைத் தலைவலி நீங்கும்..

28. பூசணிக்காய் சாறில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளை சோர்வு நீங்கும்.. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்று புழுக்கள் நீங்கும்.. பழுத்த மாம்பழத்தின் சாரை சிறிது சூடு படுத்தி சாப்பிட்டால் அதிக தாகம் பித்த மயக்கம் குறையும்..

29. செம்பருத்தி பூவை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சூடு தணிந்து ரத்தம் விருத்தியாகும்.. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட இரத்தபேதி சீத பேதி தீரும்.. பச்ச வெங்காயத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும்..

30. புங்க மர இலையை காய்ச்சி அடிக்கடி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும்.. நெல்லிக்காயை தினமும் காலையில் சாப்பிட்டால் இரத்தம் உறைவதை தடுக்கலாம்.. வேர்க்கடலையை நேந்திர வாழைப்பழம் பாலும் சாப்பிட உடல் பெருக்கும்..

  • மூச்சு திணறல் பாட்டி வைத்தியம்

31. உடல் இளைத்தவர்கள் குண்டாக பேரிச்சம் பழம் சாப்பிட பலன் கிடைக்கும்.. விளாம்பழம் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்க முடியும்.. சுரக்காய் பச்சடி செய்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை வராது..

32. குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுத்து வர உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறும்.. நன்னாரி வேரை காய்ச்சி இரண்டு வேலை குடிக்க நல்ல பசி எடுக்கும்.. பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து குடித்து வர இருமல் நிற்கும்..

33. உடல் பலவீனமானவர்கள் ஆரஞ்சு பழத்தை சாப்பிட சக்தி பெரும்.. விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இருமல் குணமாகும்.. பேரிச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து காலை உணவுக்கு முன் சாப்பிட மார்பு வலி குறையும்..

34. ஆஸ்துமா குணமாக சங்கு இலையை துவையல் செய்து சாப்பிட்டு வர குணமாகும்.. தினசரி ஐந்து ஆவாரம் பூ மொட்டு சாப்பிட்டு வர சிறுநீர் புறவழி புண்கள் ஆறும்.. வெற்றிலை காம்பு வசம்பு திப்பிலியை வெந்நீரில் அரைத்து குடித்தால் சளி குறையும்..

35. அண்ணாச்சி பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் வராது.. இஞ்சி சாறுடன் தேன் கலந்து குடிக்க சொத்தை பல் வலி குணமாகும்.. எலுமிச்சம் பழச்சாறு இரண்டு சொட்டுகள் காதில் விட காது குடைச்சல் குணமாகும்..

36. ஒரே நேரத்தில் நெய்யும் தேனும் கலந்து சாப்பிடக்கூடாது.. மருதாணி இலையை நீரில் ஊற வைத்து வாய் கொப்பளிக்க தொண்டை கரகரப்பு நீங்கும்.. துளசி இலையின் சாரெடுத்து தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் இருமல் குணமாகும்..

37. அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து கொள்ள கண்கள் ஒளி பெறும்.. நாவல் பழத்தை சாப்பிட்டு வர கண் எரிச்சல் நீர் வடிதல் நிற்கும்.. ஆரஞ்சு பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர மீனிங் பளபளப்பு தன்மை கிடைக்கும்..

38. தேனையும் சுண்ணாம்பையும் ஒன்றாக குறைத்து பித்த வெடிப்பில் தடவி பித்த வெடிப்பு குணமாகும்.. மிளகு பொடியை தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.. துளசி இலையை தொடர்ந்து முகர்ந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்..

39. குங்குமப்பூவை தேன் கலந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.. கோரைக்கிழங்கு கசாயம் செய்து குடித்தால் காய்ச்சல் குணமாகும்.. நெல்லிக்காய் சாறுடன் தேங்காய் எண்ணெயை கலந்து தலைக்குத் தேய்க்க கண்கள் குளிர்ச்சி அடையும்..

40. தினமும் இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி பெறும்.. வாத நோய் மூல நோய் உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிடக்கூடாது.. முள்ளங்கியை சாறு பிழிந்து சாப்பிட ஜலதோஷம் மற்றும் இருமல் நீங்கும்..

Read Also:- விக்கல் நிற்க பாட்டி வைத்தியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *