Tamil Motivational Quotes

தன்னம்பிக்கையூட்ட கூடிய 50+ தமிழ் கவிதைகள் | Motivational Quotes In Tamil

தன்னம்பிக்கையூட்ட கூடிய 50+ தமிழ் கவிதைகள் | Motivational Quotes In Tamil

Motivational Quotes In Tamil
Motivational Quotes In Tamil

Motivational Quotes In Tamil – தன்னம்பிக்கை கவிதை வாழ்வில் எத்தகைய சூழ்நிலையிலும் நாம் முயற்சி ஒன்றே செய்தோமானால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். அத்தகைய முயற்சிகளை அல்லது தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய முத்தான கவிதைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

எண் Motivational Quotes In Tamil
1 ஏமாற்றும் போது நினைவில் கொள் நிச்சயம் ஒரு நாள் நீயும் ஏமாற்றப்படுவாய் என்று…!!
2 நீ நல்லவனாக இரு கெட்டவனாக இரு அது முக்கியமில்லை. ஆனால் நம்புறவங்களுக்கு உண்மையா இரு..!!
3 பொய்யை உண்மை போல் பேசி வாழ்பவர், ஒருநாள் அந்த பொய்யாலையே வாழ்க்கையை இழப்பார்..!!
4 எந்த மிருகமும் அன்பைப் பெற்றுக் கொண்டு துரோகத்தை வெளிப்படுத்துவதில்லை, மனிதனைத் தவிர..!!
5 யாரும் என்னை ஏமாற்றினால் நான் ஏமாந்து விட்டதாக அர்த்தமில்லை, நான் அவர்களை அதிகமாக நம்பினேன் என்று அர்த்தம்…!!
6 மனதில் பட்டதை சொல்லும் பொழுது சில இடங்களில் பிரச்சினை முடிவுக்கு வருகிறது. சில இடங்களில் பிரச்சினை ஆரம்பமாகிறது..
 7 ஏமாந்து இருக்கும் பொழுது தான் சிந்திக்கிறோம் எத்தனை நாள் எப்படி ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்று..!!
8 யாரையும் உடலாலும் மனதாலும் காயப்படுத்த வேண்டாம். இன்று நீங்கள் பலம் மிக்கவராக இருக்கலாம். ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் காலம் உங்களை விட பழம் மிக்கது..
9 நீ அடைய நினைக்கும் இலக்கை கல் வந்தாலும் சொல் வந்தாலும், கலங்காமல் நீ முன்னேறு, அனைவருக்கும் பதில் சொல்லும் முன் வெற்றி..!!
10 அவரவர் தேவைக்கு நம்மை பயன்படுத்தி கொள்வதை நாம் தான் பாசம் என்று தவறாக புரிந்து கொள்கிறோம்..
11 உயர்ந்து பறக்கும்போது உதவும் உறவை விட, கீழே விழும் பொழுது தாங்கி பிடிக்கும் உறவே சிறந்தது..
12 கோபத்திலும் வார்த்தைகளில் நிதானம் தேவை. கோபம் தீர்ந்துவிடும் ஆனால் வார்த்தைகள் வாழ்ந்து கொண்டே இருக்கும். பிறர் மனதில் ஆறாத வலியாய்…
13 யாரையும் தெருவில் கிடக்கும் காகிதமாக நினைத்து விடாதே. நாளை அது பட்டமாக பறந்தால் நீயும் சற்று நிமிர்ந்து தான் அதை பார்க்க வேண்டும்…
14 நமக்கு அனைத்தையும் கற்றுத் தருவது நம்முடைய வாழ்க்கை அல்ல. நாம் அதிகமாக நேசித்த ஒரு பொய்யான உறவு தான்…
15 நாம் தினம் தினம் எவ்வளவுதான் உதவி செய்தாலும் நன்றி கெட்டவர்கள் மனதில் நமக்கு மதிப்பே இருக்காது…
16 கடிக்கும் மிருகங்களோடு வாழ்ந்து விடலாம் நடிக்கும் மனிதர்களோடு வாழவே முடியாது..
17 பலரின் உறக்கம் இல்லாத இரவுகளுக்கு சிலரின் இரக்கம் இல்லாத துரோகமே காரணம்..
18 பொய்யை உண்மை போல் பேசி வாழ்பவர் ஒருநாள் அந்த பொய்யாலேயே, தங்கள் வாழ்க்கையை இழப்பார்…
19 புதுசு வந்த பிறகு பழசுக்கு மரியாதை இல்லை ஒரு பொருளாக இருந்தாலும் சரி உறவாக இருந்தாலும் சரி..
20 உரிமை இல்லாத இடத்தில் எதையும் எதிர்பார்ப்பது தவறு..
21 கடவுள் கைவிட்டு விட்டதாக கவலைப்படாதீர்கள் கடைசியில் துரோகிகளை காற்று கொடுப்பது கடவுள் மட்டும் தான்..
22 தடுக்கி விழும்போதுதான் உணர்ந்தேன் நான் யார் என்பதையும் இருந்தவர் யார் என்பதையும்..
23 நான் இருக்கிறேன் என்று கூறி யாரையும் ஏமாற்றி விடாதே அந்த வலி மிகவும் கொடியது..
24 மனசாட்சியை மதிக்கத் தெரியாத முட்டாள் யாருக்கும் உண்மையாக இருக்க மாட்டான், அவனுக்கும் கூட..
25 இழுத்துப் பிடித்து கஷ்டப்படுவதை விட, விட்டுட்டு போறதை எவ்வளவு மேல் சில உறவுகளையும் கூடத்தான்..
26 உன்னை நேசித்த உள்ளங்களுக்கு மட்டும் மனதில் இடம் கொடு.. உன்னை வெறுத்த உள்ளங்களுக்கு உன் நிழலில் கூட இடம் கொடுக்காதே..
27 நீ பிறருக்கு செய்யும் துரோகம், உனது பிள்ளைகளுக்கு நீ சேர்த்து வைக்கும் பாவமாக மாறும்.
28 அளவுக்கு மீறி ஆடுபவர்களை காலம் உரிய நேரத்தில் கட்டாயம் திருத்தும். வாழ்க்கை என்னவென்று வலிகளால் உணர்த்தும்..
29 பணம் இன்று வரும் நாளை வந்த வழியே சென்று விடும்.. ஆனால் பாசம் என்றும் நிலையானது.. பணத்துக்காக பாசத்தை விட்டு விடாதீர்கள் மீண்டும் கிடைப்பது கடினம் தான்..
30 புரியாத அன்பு தொடர்ந்தாலும் ஒன்றுதான் முறிந்தாலும் ஒன்றுதான்..
31 காயப்படுத்தும் இதயம் கல்லாக தான் இருக்கும் ஆனால் காயம் தாங்கும் இதயம் எப்பொழுதும் அன்பாகத்தான் இருக்கும்..
32 பிறருக்கு கொடுக்கும் நிலை என்னிடம் இல்லை என்றாலும் பிறரை கெடுக்கும் மனம் என்னிடம் இல்லை..
33 நன்றி மறப்பது நன்றன்று.. நன்றிகெட்ட மனிதர்களை அன்றே மறப்பது நன்று..
34 யார் மீதும் அதிகமாக பாசம் வைக்காதீங்க.. அவங்க தெளிவாத்தான் இருப்பாங்க நாம தான் அவங்க மேல பைத்தியமாய் இருப்போம்..
35 சில பேர் நன்றாகவும் அன்பாகவும் அக்கறையாகவும் பேசினால்.. தமிழ் பாசம் இருக்கும் என்று நினைக்க வேண்டாம். நம்மை சாமர்த்தியமாக ஏமாற்றுகிறார்கள் என்று கடைசியாக தான் புரியும்..
36 துரோகங்கள் வலியை விட ஆச்சரியமாகத்தான் தெரிகிறது.. எப்படி இவ்வளவு சிறப்பாக நடத்தி ஏமாற்றுகிறார்கள் என்று..
37 எவ்வளவுதான் மனதை வேதனைப்படுத்தினாலும் ஒருவரை மறக்கவோ, வெறுக்கவும் முடியவில்லை என்றால் அதுதான் உண்மையான அன்பு .
38 அவமானப்படுத்தியவர்களுக்கு வார்த்தையில் பதில் சொல்லாதே, உன் வாழ்க்கையை பதிலாக சொல். உன் தலை நிமிர நிமிர அவர்கள் தலை குனிந்து செல்வார்கள்..
39 எந்த சூழ்நிலையிலும் எவரையும் நம்பாதீர்கள். இப்போது உள்ள மனிதர்கள் எல்லாம், எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் துரோகம் இழைக்க கற்றுக் கொண்டார்கள்..
40 யாருக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் தருகிறோமோ.. அவர்களிடம் நமக்கு முக்கியத்துவமே இல்லாமல் போய்விடுகிறது..
41 நாம் என்னதான் ஓடி ஓடி உதவி செய்தாலும், சில சுயநல உறவுகள் எம்மை பார்த்து கேட்கும் ஒற்றைக் கேள்வி, “நீ என்னத்த பெருசா செஞ்சுட்ட”
42 நமக்கு பிடித்தவர்களிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் ஜெயித்து விடுகிறோம். ஆனால் அதே உண்மை அவர்களிடம் எதிர்பார்க்கும் போது தோற்று விடுகிறோம்..
43 நிம்மதி இல்லை என்று வருத்தப்படாதே நல்லவர்களுக்கு என்றுமே அது கிடையாது..
44 சிலர் உயரத்திற்கு ஏறி சென்றவுடன் ஏறி வந்த வலியை மறந்து விடுகிறார்கள்..
45 யாரையும் நம்பி யாருக்காகவும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். இறுதியில் நம்மை குற்றவாளி ஆக்கி விட்டு அவர்கள் ஒன்று சேர்ந்து கொள்வார்கள்.
46 நம்மை ஒதுக்க வைக்க வேண்டும் என்று நினைப்பவர்களிடமிருந்து நாமாகவே ஒதுங்கி விட வேண்டும். அதுவே நமக்கு மரியாதை.
47 நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றுவது சாமர்த்தியம் அல்ல, அது துரோகம்..
48 என்னதான் சிலருக்கு நாம் நெருங்கிய உறவாக இருந்தாலும், அவர்களுக்கு நெருங்கிய உறவு வரும் பொழுது நாம் யாரோ தான்..
49 உங்களை உதாசீனம் செய்கிறார்கள் என்றால் நீங்கள் ஒதுங்கி விடுங்கள்.. அவர்களுக்கு வேறு புதிய உறவுகள் வந்து விட்டார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்..
50 ஒருபோதும் உங்களை நியாயப்படுத்திக் கொள்ள பிறரை காயப்படுத்தி விடாதீர்கள்..

மேலும் படிக்க: Life Quotes In Tamil | வாழ்க்கை பற்றிய கவிதைகள்

TAMILQUOTES

TAMILQUOTES.IN is a Portal of New Tamil Poem and Quotes of all type. Here the reader can get all type of Tamil Poem like love, sad, comedy, pain, Heart touching etc.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
slot bonanza bonanza138 bonanza138 pakar69 pakar69 deposit pulsa tanpa potongan slot deposit dana 5000 slot bonanza logn bonanza138 rtp slot bonanza138 rtp slot pakar69 bonanza138 situs slot gacor situs slot online bonanza 138 gates of aztec bonanza138 link alternatif pakar69 judi bola sbobet slot demo Bonus Slot Online